பொன்னிறக்கடல்

பொன்னிறக்கடலில் 
பெண்மை பாதி 
ஆண்மை பாதியாய் 
எங்கள் கடல் அன்னை...

கதிரவனின் வருகைக்கு
நாங்களும்
எங்களின் வருகைக்கு
கடலின் அன்னையும்
காத்துத்தான் கிடக்கிறோம்....

அமைதியாய்
அன்பாய்
ஆவேசமாய்
ஆர்ப்பரிப்பாய் இவளின்
அலைகளில் தான்
எத்தனை லயங்கள்....

இவளின் நீளம்
அகலம் ஆழம்
அளந்ததில்லை
அன்பை மட்டுமே
நம்பிக்கையாய்கொண்டு
நித்தம் இறங்குகிறோம்...

மீன்களின் எண்ணிக்கையோ
மீனவர்களின் எண்ணிக்கையோ
இவள் அறிவாளோ நானறியேன்
மீன்களின்றி மீனவர்
சோர்ந்ததில்லை
உணவின்றி மீன்களும்
மாண்டதில்லை இவள் மடியில்....

மாதா பிதா
குரு தெய்வமாய்
நீ
மாணவராய்
என்றும் நாங்கள்....

அலைகளின் ஓசையிலே
அளவளா பாடங்கள்
அளித்தருள நீ இருக்கையிலே
மீனவராய் பிறந்திட
மாதவம் தான் செய்திட்டோமே ♥

-இணைய செய்தியாளர் : மாதங்கி லதா